பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!!

787

பல்கலைக்கழக அனுமதிக்காக..

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்கள் நாளை முதல் பொறுப்பேற்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், விண்ணப்பங்கள் மார்ச் 26 ஆம் திகதி வரை பொறுப்பேற்கப்படும். விண்ணப்பங்களை ஓன்லைன் மூலமும் சமர்ப்பிக்க முடியும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, 2019 / 2020 பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி நாளை முதல் ஆரம்பமாக இருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த பிரேம குமார தெரிவித்துள்ளார்.

இதற்கான வழிகாட்டி நூல் நாளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும், அங்கீகரிக்கப்பட்ட நூல் விற்பனை நிலையங்களிலும் மாணவர்களால் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.