விசேட கருத்தரங்கு..
தேசிய உற்பத்தி திறன் தொடர்பாக வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த பாடசாலை அதிபர்களுக்கான கருத்தரங்கு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (04.03.2020) காலை தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது.
குறித்த செயலமர்வு வவுனியா மாவட்ட செயலக தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் முன்னேடுக்கப்பட்டது.
தேசிய உற்பத்தி திறன் 2020ம் ஆண்டிற்கான போட்டிற்கு விண்ணப்பம் மேற்கொள்வது தொடர்பாக அறிவுறுத்தல் வழங்குவதுடன் வவுனியா மாவட்ட பாடசாலைகள் கடந்த வருடங்களில் விண்ணப்பம் செய்வதில் அசமந்த போக்காக இருந்தனர்.
இதனை அதிபர்களுக்கு அறிவுறுத்தி இம்முறை போட்டிக்கு பாடசாலைகளும் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய இச் செயலமர்வு இடம்பெற்றிருந்தது.