இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு நாயகன் பட பாணியில் க டத்தல் : அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மீனவர்கள்!!

630

நாயகன் பட பாணியில்..

நாயகன் பட பாணியில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் க டத்தப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அ டிக்கடி தங்கம் க டத்தப்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றது. இதற்கு மீனவர்களை பெரும்பாலும் பயன்படுத்தி பண ஆசையை தூண்டி இவ்வாறு செய்ய வைக்கின்றனர்.

இவ்வாறு க டத்தப்படும் தங்கத்திற்கு பதிலாக, க ஞ்சா, பீ டி இலைகள், மற்றும் போ தை பொ ருட்களை இலங்கைக்கு கொண்டு செல்கின்றனர். இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடைபெறும் நிலையில், இந்திய கடலோர காவல்படை அவர்களை சிக்க வைத்து வருகின்றது.

இந்நிலையில், நாயகன் படபாணியில் நேற்று(4.2.2020) ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, தூத்துக்குடி வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தங்கம் க டத்தப்படுவதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து மண்டபம் கடலோரக் காவல் படையினர் உதவியுடள் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காத்திருந்தன.

அப்போது அங்கு வந்த நாட்டு படகை சோ தனை செய்ததில் எதுவும் சிக்கவில்லை. இதனை அடுத்து அதிலிருந்த மீனவர்கள் இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள், தங்கம் க டத்தி வந்ததையும் வழியில் கடலோரக் காவல் ப டையினரைக் கண்டவுடன் படகில் இருந்த தங்கக் கட்டி பார்சல்களில் கல்லை கட்டி முயல் தீவு அருகே கடலில் போட்டுவிட்டு அந்த இடத்தை ஜி.பி.எஸ் கருவி மூலம் அடையாளம் செய்து கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, மீனவர்கள் இருவரும் மண்டபம் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ஹோவர் கிராஃப்ட் கப்பலில் அப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடலில் மீனவர்கள் காட்டிய அடையாள மார்க்கினைக் கொண்டு இந்தியக் கடலோரக் காவல் படையின் நீச்சல் வீரர்கள் மூலம் கடலினுள் தே டுதல் வே ட்டை நடத்தப்பட்டது.

இதில் கடலிலிருந்து மீ ட்கப்பட்ட ஒரு பையில் 5 பார்சல்கள் இருந்துள்ளது. அதில், 14கிலோ தங்க கட்டிகள் இருந்துள்ளன. அவற்றை மீட்ட வருவாய் பு லனாய்வு அதிகாரிகள் ஆஷிக் என்பவரையும், பாரூக் என்பவரையும் கைது செய்தனர்.