கொழும்பு பிரதான வீதியில் விபத்து : சம்பவ இடத்திலேயே இ ளைஞர் பலி!!

527

விபத்து..

கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ரஞ்சிராவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் ரஞ்சிராவ பகுதியை சேர்ந்த 19 வயதுடைய அனுசதில்ஷான் என்ற இளைஞனே உ யிரிழந்துளார்.

டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் கினிகத்தேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.