
பாகிஸ்தானில் ‘அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளை உற்பத்தி செய்வதற்கான’ உபகரணங்களை ஏற்றி சென்ற சீன கப்பலை இந்தியா கைப்பற்றியுள்ளது.
அணுசக்தி திறன் கொண்ட இரா ணுவ உபகரணங்களை உருவாக்க பாகிஸ்தானுக்கு பொருட்களை எடுத்து சென்றதாக பிப்ரவரி 3ம் திகதியன்று சீன கப்பல் இந்திய சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள போர்ட் காசிம் செல்லும் வழியில் குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்தில் “டா குய் யுன்” என்ற கப்பல் சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் மேற்கொண்ட சோ தனைகளின் படி, அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பொருட்கள் அதில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஆட்டோகிளேவ் மூலம், 1,500 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று தா க்கக்கூடிய மிக நீண்ட தூர ஏவுகணைகளின் மோட்டாரை தயாரிக்க பயன்படுத்தலாம் மற்றும் விண்வெளி ராக்கெட்டுகள் செய்ய பயன்படுத்தலாம் என கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை சீன மறுத்துள்ளது.




