இலங்கையிலும் தீவிரமடையும் கொரோனா வைரஸின் அ ச்சம் : மேலும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

572

கொரோனா வைரஸ்

இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற ச ந்தேகத்தின் பேரில் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் என்ற சந்தேகத்தின் பேரில் 10 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இவர்களில் மூவர் அங்கொட தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் பிரிவின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டார். மேலும், 7 பேர் பதுளை உள்ளிட்ட வைத்தியசாலைகள் பலவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் தென் கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுவதாக சிரேஷ்ட வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.