வவுனியாவில் பாடசாலை மாணவனைக் காணவில்லை!

512

missingperson

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் பாடசாலைக்குச் சென்ற மாணவனை(13.06.2013) திகதி முதல் காணவில்லையென பெற்றோரால் பொலிஸ்நிலையம், மனித உரிமைக்குழு, சிறுவர் பாதுகாப்புக்குழு, பாடசாலை நிர்வாகம் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கும் சிவசூரியகுமார் சனராச் என்ற மாணவன் கடந்த 13 ஆம் திகதி காலை பாடசாலைக்கெனச் சென்ற இடத்தில் காணாமற் போயுள்ளதாகவும் இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ, மனிதஉரிமைக்குழுவுக்கோ அல்லது 0243248887, 0773369084 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையில் கற்கும் நான்கு சக மாணவர்கள் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.