மருந்து கண்டுபிடித்தாலும் கொரோனா ஆபத்திலிருந்து தப்ப முடியாது : பென்டகன் தகவல்!!

342

கொரோனா வைரஸ்

புதிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவினுள் வேகமாக பரவி வருவதாக அந்த நாட்டு சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையில் அமெரிக்காவில் 19 பிராந்தியங்களில் 228 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதில் 49 பேர் அமெரிக்காவுக்கு வெளியே வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள். நேற்று வரையில் அமெரிக்காவில் 10 பேர் கொரோனா வைரஸினால் உ யிரிழந்துள்ளனர்.

புதிய கொரோனா வைரஸிற்கான நோய்த்தடுப்பு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், எதிர்வரும் குளிர்காலத்தில் கொரோனா வைரஸினால் ஏற்படும் ஆபத்தினை குறைக்க முடியாதென அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளமையினால் முக்கிய நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.