கோர விபத்தில் தாய் – மகள் பலி!!

318

கோர விபத்தில்..

நாத்தன்டிய – துன்கன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தாயும், மகளும் உ யிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிள் மற்றும் சிறிய ரக லொரி ஒன்று மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மீகஹக்கிவுல – வெலிபென்னகஹமுல பிரதேசத்தை ரவலங்கே சந்திரிக்கா சேனாரத்ன மெனிக்கே என்ற 54 வயதுடைய தாயும், அஹினசா துலாஞ்சலி என்ற 21 வயதுடைய யுவதியுமே உ யிரிழந்துள்ளனர்.

உ யிரிழந்த யுவதி பிபிலாதெனிய மத்திய மஹா வித்தியாலயத்தில் சங்கீத ஆசிரியராக சேவை செய்து வந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளை அவரே ஓட்டியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாரவில பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.