மட்டக்களப்பில் கடலில் குளிக்கச் சென்ற மூவரை அலை இழுத்துச் சென்றது : நால்வர் உயிருடன் மீட்பு!!

272

Beach1மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பிரதேசத்தில் நேற்று மாலை கடலில் குளிக்கச் சென்ற 7 பேரை அலை இழுத்துச் சென்றது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது…

நேற்று மாலை 25 வயதிற்கு குறைந்த 7 இளைஞர்கள் சவுக்கடி கடலில் குளிக்கச் சென்றனர். இவர்கள் அனைவரும் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இவர்களில் நால்வர் பாதுகாப்பாக கரை திரும்பி தகவல் கொடுத்ததன் பேரில் காணமல் போன மூவரை தேடும் பணியில் பொலிசாரும் பிரதேச மக்களும் ஈடுபட்டனர்.

இரவு 11 மணிவரை தேடுதலில் ஈடுபட்டபோதும் மூவர் சம்பந்தமான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இவர்கள் அனைவரும் இறந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகின்றது. இச் சம்பவத்தால் அப் பிரதேசத்தில் பரபரப்பு நிலவுகின்றது..

-ரமணன்-