வான் விபத்து..

கிண்ணியாவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற வான் ஒன்று மூதுார் இறால்குழிப்பாலத்திற்கு (உப்புக்காச்சி மடு) முன்னால் மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் பலத்த காயங்களுடன் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் கிண்ணியாவிலிருந்து பயணித்த மத்ரஸா மாணவர்கள் மூவரே படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

வானின் சாரதியும் சிறுகாயங்களுக்கு உள்ளாகி மூதுார் தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதுார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




