இலங்கையர்கள் உட்பட 14 நாட்டவர்களுக்கு தடை விதித்த கட்டார்!!

483

14 நாட்டவர்களுக்கு..

கட்டார் நாட்டிற்கு செல்லும் 14 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கட்டார் அறிவித்துள்ளது. 14 நாட்டு பயணிகளில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

கட்டார் நாட்டிற்குள் கொரோனா தொற்று பரவுவதனை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.