இந்திய நாணயத்தின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி.

745

indian-currency

இந்திய ரூபாவின் மதிப்பு ஏற்கனவே பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்திய நாணயத்தின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க மத்திய வங்கி அதன் நிதி ஊக்குவிப்புத் திட்டத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையிலேயே, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாவின் மதிப்பு கடந்த புதன்கிழமை 58.72 ஆக இருந்தது. ஆனால் இப்போது 59.93 ரூபாவாக மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

பொருளாதாரத்துக்குள் பணத்தை முதலிடும் அமெரிக்க மத்திய வங்கியின் திட்டத்தின்மூலம் உலகில் முன்னேறிவரும் பொருளாதார நாடுகளுக்கும் பணம் வந்துகொண்டிருந்தது.

இந்திய பொருளாதாரம் அந்நிய நிதி வருமானத்தில் பெருமளவில் தங்கியிருக்கின்றமையை இப்போதைய நாணய மதிப்பின் வீழ்ச்சி காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவிலிருந்து வெளியில் செல்லும் பணத்துக்கும் உள்நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் வருவாய்க்கும் இடையில் ஏற்படும் இடைவெளி கடுமையாக அதிகரித்துள்ளது.

இந்திய ஏற்றுமதி வருமானத்தை விட இறக்குமதிக்கான செலவினம் அதிகரிக்கின்ற போதே இந்த பற்றாக்குறை ஏற்படுகின்றது.

இந்த பற்றாக்குறையாலும் அதிகரித்த பணவீக்கத்தாலும் இந்திய ரூபாவின் மதிப்பு ஏற்கனவே கடுமையாக பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.