கொரோனா தொற்றுக்கள் பரவாமல் தடுக்க இவற்றைத் தொடாதீர்கள்!!

695

கொரோனா..

இன்று கொரேனா அ ச்சம் பலரிடையே காணப்படுவதனால் இதற்கான முன்னெச்சரிக்கை எடுப்பதே சிறந்த வழிமுறை ஆகும்.

கொரேனா வைரஸ் பல இடங்களில் பல வழிகள் பரவி வருகின்றது. அதில் சில பொருட்களை தொடுவதால் கூட வைரஸ் பரவுவதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக வாகனங்களின் கைப்பிடிகள், சீட்டுகள், கதவுகளின் கைப்பிடிகள், லேண்ட் லைன் தொலைபேசிகள், மொபைல்ஃபோன், லேப்டாப், கிண்டில் போன்ற கேட்ஜெட்டுகளின் மேற்பரப்பு மூலமாக, மெனு கார்டுகள், ரூபாய் நோட்டுக்கள் கூட பரவிகின்றன என சொல்லப்படுகின்றது.

ஆகவே இவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் சானிட்டைசர் பயன்படுத்துவது அவசியமானது ஆகும்.

அதுமட்டுமின்றி பலரும் பயன்படுத்தும் பொருட்களின் மூலமாக கூட பரவுவதால் இதைத் தடுப்பதற்கு டிஷ்யூக்கள் மூலமாக அவற்றைத் துடைத்துப் பயன்படுத்துங்கள். ஹேண்ட் சானிட்டைசர் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

இந்த வைரஸ் கடினமான உலோகங்களின் மேற்பரப்பில் தங்கும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை தடுக்க உலோகங்களைப் பயன்படுத்தினால் கைகளை சானிட்டைசர் கொண்டு சுத்தப்படுத்துவது அவசியம்.

உணவகங்களின் மெனு கார்டுகள், ரூபாய் நோட்டுக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியதும் கிருமி நாசினி பயன்படுத்துங்கள். ஆண்டி மைக்ரோபியல் வெட் வைப்ஸ் எனப்படும் கிருமி நாசினி டிஷ்யூக்களைப் பயன்படுத்தி முகத்தைத் துடைக்கலாம்.

ஏடிஎம் இயந்திரங்கள், எஸ்கலேட்டர்கள், லிஃப்ட் பயன்பாடு ஆகியவற்றுக்குப் பிறகும் சானிட்டைசர்களைப் பயன்படுத்துவது அவசியமானதாகும். மேலும் இதுபோன்ற முன்னொச்சரிக்கை மேற்கொண்டாலே போதும் எப்பேர்ப்பட்ட வைரஸில் இருந்து விடுதலை பெற முடியும்.