புதுமணத் தம்பதி
தமிழகத்தில் சுயமரியாதை தி ருமணம் செய்த கா தல் ஜோ டி தி ருமணம் முடிந்த சில நிமிடங்களில் க டத்தப்பட்ட ச ம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வன் என்பவர், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் க டும் எ திர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து நேற்று சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது.
அப்போது அங்கு வந்த சுமார் 40 ற்கும் மேற்பட்டோர் அ ங்கிருந்தவர்களை அ டித்துள்ளனர். செல்வன் மற்றும் இளமதி ஜோடியை அ டித்து கா ரில் ஏற் றி கொ ண்டு செ ன்றுள்ளனர்.
இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பொலிசார் செல்வனை மீ ட்டனர். தொடர்ந்து இளமதியை மீ ட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே காதல் ஜோடியை க டத்தியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் காவல் நிலையத்தை மு ற்றுகையிட்டு போ ராட்டம் நடத்தினார்கள்.