பிரசவ அறைக்கு செல்லும் முன்பே குழந்தை பெற்ற பெண் : கமெராவில் பதிவான காட்சி!!

669

கமெராவில் பதிவான காட்சி..

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பிரசவ அறைக்கு செல்லும் முன்பு, லிப்டுக்கு அருகிலேயே ஒரு பெண் குழந்தை பெற்றெடுக்க லிப்டில் இருந்து வெளியே வந்தவர்கள் அ திர்ந்தனர்.

Julie Anne Longanoவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட, அவரால் வீட்டிலிருந்து வெளியே வந்து காரில் கூட ஏற முடியவில்லை.

நான்கு கால்களால் தவழ்ந்து சென்றுதான் காரிலேயே ஏறியிருக்கிறார். எப்படியோ மருத்துவமனை வந்து சேர, ஸ்ட்ரெச்சரில் படுக்கவைக்கப்பட்ட Julieயை பிரசவ அறைக்கு செல்வதற்காக லிப்டுக்கு காத்திருந்திருக்கிறார்கள் அவரது கணவரும் நர்ஸ் ஒருவரும். ஆனால் அதற்குள் Julieக்கு பிரசவம் தொடங்கிவிட்டது.

குழந்தையின் தலை வெளிவே வருவதைக் கண்ட அந்த நர்ஸும் Julieயின் கணவர் Trentம் அவர் பிரசவிக்க உதவ, சரியாக அந்த நேரம் பார்த்து லிப்டின் கதவு திறந்திருக்கிறது.

லிப்டை விட்டு வெளியே வந்தவர்கள் அங்கு ஒரு பிரசவம் நடைபெறும் என எதிர்பார்க்காததால் அ திர்ச்சியுடன் அங்கிருந்து வேகவேகமாக நடையைக் கட்டினர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த CCTVகமெரா ஒன்றில் பதிவாகியுள்ளன.

யாருக்கு எங்கே பிரசவம் ஆகவேண்டும் என்று இருக்கிறதோ, அங்குதானே ஆகும் என்று Julie கூற, தன் மனைவியின் பிரசவம் கமெராவில் பதிவு செய்யப்பட்டதற்காக மகிழ்ச்சி அடைகிறார் Trent.