வவுனியாவில் இரு மொழி உதவு நிலையம் திறப்பு!! (படங்கள்)

339

மொழி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு இன்று (27) வவுனியா மாவட்ட செயலகத்தில் இரு மொழி உதவு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நிலவிவரும் மொழிசார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ், அமைச்சர் வாசுதேவ நாணயகாரவினால் இந் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இதேவேளை கலாச்சாரம், பண்பாடு, மொழி அடையாளங்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இரு மொழிக் கொள்கை மற்றும் மொழிசார்ந்த ஒருமைப்பாட்டை அவசியம் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கோடு இந் நிலையம் திறந்துவைக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், ஜனாதிபதி செயலகத்தின் வவுனியா இணைப்பாளர் சிவநாதன் கிசோர் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

135