இளம்பெண் மருத்துவர்

வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த நபருக்கு கொரோனா வைரஸ் இருக்கலாம் என பீ தியை கிளப்பியதாக பெண் மருத்துவர் பணி நீக்கம் செய்யப்பட்டதோடு, அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்படவுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவிவிட்டது. இந்தியாவில் இந்த நோய் பரவ தொடங்கியதுமே கொரோனா பாதிப்புடன் யாராவது இருந்தால் அல்லது ச ந்தேகம் வந்தாலே உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு தகவல் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது அதிலும் கேரளாவில் இது தொடர்பில் அரசு ஆணை கூட பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஷினு ஷியாமளன் என்ற பெண் மருத்துவர் கேரளாவின் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். இவரின் மருத்துவமனைக்கு நோயாளி ஒருவர் வந்திருக்கிறார்.

கட்டாரில் இருந்து சமீபத்தில் ஊருக்கு வந்த அவர் கடுமையான காய்ச்சலுடன் வந்திருந்தார்.
அவர் வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் தான் ஊருக்கு திரும்பினார் என்ற தகவலை அரசிடம் கூறவில்லை.

மேலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அவர் மறுத்ததாக கூறிய மருத்துவர் ஷினு இது குறித்து அரசுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் இதன் காரணமாக ஷினுவுக்கு பெரும் பி ரச்சனை ஏற்பட்டுள்ளது.

அவர் தனியார் மருத்துவமனையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்ட மருத்துவ அலுவலகம் ஷினு மீது புகார் கொடுத்துள்ளது, இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிகிறது.

இது குறித்து மாவட்ட மருத்துவ அலுவலகம் விடுத்த அறிக்கையில், ஷினுவிடம் வந்த நோயாளிக்கு முழுமையான ப ரிசோதனை செய்யப்பட்டு அவர் மீண்டும் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்.

ஆனால் தேவையில்லாமல் பீ தியை கிளப்பி, ஒட்டு மொத்த மருத்துவ சமுதாயத்துக்கும் மருத்துவர் ஷினு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஷினு கூறுகையில், நான் என் பணியை செய்ததற்காக தண்டிக்கப்பட்டுள்ளேன்.
வெளிநாட்டுக்கு திரும்ப சென்ற அந்த நபருக்கு எந்த பி ரச்சனையும் இல்லை, ஆனால் நான் தான் என் பணியை இழந்துவிட்டேன் என க ண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும் அதே மருத்துவமனையில் மீண்டும் பணியில் சேர மாட்டேன் எனவும் தனக்கு பணி கொடுக்க நிறைய மருத்துவமனைகள் தயாராக இருப்பதாகவும் ஷினு கூறியுள்ளார்.




