கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த தமிழக மாணவன் : சுகாதார அமைச்சருக்கு வேண்டுகோள்!!

838

தமிழக மாணவன்..

உலகையே அ ச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு தமிழக மாணவன் ஒருவர் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வரும் நிலையில், அதை இணையவாசிகள் சுகாதார துறை அமைச்சருக்கு டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இன்று முதியவர் ஒருவர் உ யிரிழந்தார்.

அதுமட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து சென்னை வந்திருக்கும் இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஆனால் சுகாதார துறை அமைச்சர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்து அ ச்சப்பட தேவையில்லை, யாருக்கும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைக் கண்ட இணையவாசிகள் அவரின் டுவிட்டருக்கு கீழே, தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன், கொரோனா வைரஸிற்கு மருத்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி, அந்த சிறுவன் குறித்து செய்தி வெளியான நாளிதழை புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதனால் இதைக் கண்ட விஜயபாஸ்கர் அது குறித்து ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று தமிழக மக்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.