கனடா பிரதமரின் மனைவிக்கு..

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக செய்தி வெளியான நிலையில், தற்போது மனைவியான சோபி கிரேகோயரோவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே அ ச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளில் இருக்கும் முக்கிய தலைவர்களையும் பாதித்து வருகிறது. குறிப்பாக ஈரானில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒரு சிலர் உ யிரிழந்துள்ளனர். அதே போன்று பிரித்தானியாவின் சுகாதார துறை அமைச்சரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் கனடா பிரதமர் மனைவி Sophie Gregoire-Trudeau பிரித்தானியாவிற்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பிய நிலையில் அவர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் காரணமாக பிரதமர் Justin Trudeau-வும் அவருடன் சேர்ந்து தனிமைப்படுத்தப்பட்டார்.

இதையடுத்து தற்போது பரிசோதனையின் முடிவில் Sophie Gregoire-Trudeau-வுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லை எனவும், அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும், இருப்பினும் அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் Sophie Gregoire-Trudeau-வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரின் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




