இயக்குனர் விஜயின் சைவம் படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகன்!!

453

Batchaதலைவா படத்திற்கு பிறகு சைவம் என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய். இப்படத்தில் நாசரின் மகனான லுப்துபுதீன் அறிமுகமாகிறார். தன்னுடைய படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு சரியான திரைப்பெயர் சூட்ட விரும்பிய விஜய், பல்வேறு பரிசீலனைக்கு பிறகு நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோரின் உதவியோடு பாட்ஷா என்று பெயரிட்டுள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் விஜய் கூறும்போது, என்னுடைய படங்களில் எப்போதுமே நாசர் சாருக்கு பொருத்தமான ஒரு கதாபாத்திரம் இருக்கும். அது நான் அவருடைய தீவிர ரசிகர் என்பதால் மட்டுமல்ல அவர் எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும் அதற்கு ஜீவன் கொடுப்பவர்.

என்னுடைய சைவம் படத்திலும் அவருக்கு கதையின் முதுகெலும்பான ஒரு முதியவர் பாத்திரம் .அந்த முதியவரின் இளம் வயது பேரனாக நடிக்க நடிகர் தேர்வு செய்யும்போது, எதேச்சையாக அவரது மகன் லுப்துபுதீனை சந்திக்கும்போது அச்சு அசலாக அந்த பாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார். நடிக்க மறுத்த அவரை பெற்றோரின் சம்மந்ததொடு நடிக்க வைத்தேன்.

அவரை கமராவில் பார்த்தபோது நாயகன் நாசரை நினைவுபடுத்தினார். அவரது தோற்ற பொலிவு ஒருபுறம் இருக்க அவரது திறமையும், கண்ணியமும், என்னை மிகவும் கவர்ந்து உள்ளது. இதற்கான பெருமையில் அவருடைய பெற்றோருக்கு பெரும் பங்கு உண்டு. கண்ணியமான பெற்றோரின் வளர்ப்பு அவரது ஒவ்வொரு நடவடிக்கையிலும் புலப்படுகிறது என பெருமைபட கூறினார்.