திருகோணமலையில் ஆணொருவரின் ச டலம் மீட்பு!!

497

திருகோணமலையில்..

திருகோணமலை, இலிங்கநகர் பகுதியில் உள்ள கலப்பு பிரதேசத்தில் ஆணொருவரின் ச டலம் ஒன்று நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலிங்கநகர், முதலாம் ஒழுங்கையைச் சேர்ந்த குட்டி என்றழைக்கப்படும் காத்தீபன் என்னும் 34 வயதுடைய நபரே இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் மனைவியோடு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் நேற்று நண்பர்களுடன் ம து அரு ந்துவதற்காக சென்றுள்ளதாகவும் கண் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் கலப்பு பகுதியில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவருடைய ம ரணம் கொ லையா அல்லது இயற்கை ம ரணமா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு சென்றுள்ளதாகவும்,

மரணம் தொடர்பில் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.