பெற்றோரை எதிர்த்து தமிழனை திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டுப் பெண் : குவியும் வாழ்த்துக்கள்!!

538

வெளிநாட்டுப் பெண்

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், வெளிநாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த தம்பதி கோபால்-வசந்தி. இவர்களின் மூத்த மகனான நிர்வின் பொறியியல் படித்து முடித்துவிட்டு, சிங்கப்பூரில் இருக்கும் தனியார் கம்பெனி ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இதே நிறுவனத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேரிஜேன் அல்புரோ என்ற பெண்ணும் பணியாற்றி வந்துள்ளார். இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில், காதலர்களாக மாறியுள்ளனர்.

இதையடுத்து இருவரும் மூன்று ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளனர். பெண் வீட்டார் இதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில், மணமகன் வீட்டார் சம்மதம் தெரிவித்ததால், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

இந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்தில், மணப்பெண்ணின் தோழிகள் மட்டுமே கலந்து கொண்டனர். உறவினர்கள் கலந்து கொள்ளவில்லை.

தற்போது உறவினர்களின் சம்மதம் கிடைக்கவில்லை என்றாலும், திருமணத்திற்கு பிறகு பெற்றோரின் சம்மதத்தை வாங்கிவிடுவோம் என மணமகள் தெரிவித்துள்ளார்.

இவர்களின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், இணையவாசிகள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.