கொரோனா வைரஸின் மையமாக உள்ள ஐரோப்பா : உலக சுகாதார மையம் எச்சரிக்கை!!

612

கொரோனா..

கொரோனா வைரஸின் மையமாக இன்று ஐரோப்பா உள்ளதாக உலக சுகாதார மையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஐரோப்பிய நாடுகள் முழுமையான சமூக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் உயிர்களை கா ப்பாற்ற முடியும் என்று உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனொம் ஜிப்ரேயஸீஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் என்ற இந்த தீயை எரிய விடவேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியில் அதிகமானோர் கொரோனா வைரஸினால் உ யிரிழந்துள்ளனர்.

அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 250 பேர் ப லியாகியுள்ளனர். இதனையடுத்து அங்கு உ யிரிழந்தோர் தொகை 1266 ஆக உயர்ந்துள்ளது. 17ஆயிரம் 600 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ஸ்பெயினில் 120 பேர் ப லியாகியுள்ளனர். 4231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் 79 பேர் ப லியாகியுள்ளனர். 2876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜேர்மனியில் ஐந்து பேர் உ யிரிழந்தனர். 3062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் 11 பேர் உ யிரிழந்தனர் 798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஈரானில் கடந்த 24 மணித்தியாலங்களில் 85 பேர் உ யிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா வைரஸினால் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 514 ஆக உயர்ந்துள்ளது.