திருகோணமலை கடலில் மூழ்கிய அவுஸ்திரேலிய பெண் காப்பாற்றப்பட்டார்!!

528

Ausதிருகோணமலையை அண்மித்த கடற்கரைப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது அலையில் அடித்து செல்லப்பட்ட அவுஸ்திரேலிய இளம் பெண்ணொருவரை திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் உயிர்காப்பு பிரிவினர் காப்பாற்றியுளள்ளனர்.

தற்போது அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றும் வரும் 22 வயதுடைய யெலாமினோ என்ற பெண் இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

உயிர்காப்பாற்றப்பட்ட குறித்த பெண் சந்தோசத்தில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் உயிர்காப்பு பிரிவினருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.