பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு நடிகர் சல்மான்கான் சமீபத்தில் பாராட்டும் ஆதரவும் தெரிவித்தார்.குஜராத்தில் நடந்த கலவரத்துக்காக மோடி மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்றும் அவர் கூறினார்.சல்மான்கானின் இந்த கருத்து முஸ்லிம்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. சல்மான்கானுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதையடுத்து நடிகர் சல்மான்கான் விளக்கம் அளித்தார். என்றாலும் அதை இஸ்லாமிய மதக் குருமார்கள் ஏற்கவில்லை.மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிய மதக் குருமார்கள் நேற்று சல்மான்கானுக்கு எதிரான ஒரு அறிவிப்பை வெளயிட்டார்கள். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது..
குஜராத்தில் நடந்த கலவரத்துக்காக மோடி மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்று சல்மான்கான் கூறி இருப்பது உள்நோக்கம் கொண்டது. இஸ்லாமியர்களின் உணர்வை அவர் காயப்படுத்தியுள்ளார்.
எனவே சல்மான்கான் நடித்த படங்களை பார்க்காமல் முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை இந்த புறக்கணிப்பை நீட்டிக்க வேண்டும்.
நரேந்திர மோடி தன் இமேஜை உயர்த்திக் கொள்வதற்காக எதையும் செய்வார். இது சல்மான்கானுக்கு தெரியுமா, குஜராத் கலவரத்தின் போது பெண்களும், குழந்தைகளும் அடைந்த வேதனையை அவர் அறிவாரா அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் ஏதாவது உதவிக்கரம் நீட்டினாரா, இவ்வாறு இஸ்லாமிய மதக்குருமார்கள் கூறி உள்ளனர்.





