தோல்விக்கு பந்துவீச்சாளர்கள் தான் காரணம் : டோனி!!

297

Dhoniதென் ஆபிரிக்காவை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்தியா இழந்து விட்டது. நியூசிலாந்து சென்றுள்ள டோனி தலைமையிலான இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது.

முதலாவது ஆட்டத்தில் 24 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் 15 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 3வது போட்டி வெற்றி தோல்வியின்றியும், 4வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இப்போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் அணித்தலைவர் தோல்விக்கு பந்து வீச்சாளர்கள் சரியாக விளையாடததே காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்..

வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் எங்களது பந்து வீச்சு மிக மோசமாக இருந்தது. புதிய பந்திலும் சரி பழைய பந்திலும் சரி இது போன்று நாங்கள் சரியாக பந்து வீச வில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் ஓட்டங்களை விட்டுகொடுத்து விட்டார்கள் என்று நான் நினைக்கிறேன், சுழற்பந்து வீசசாளர்கள் சிறந்த முறையிலேயே பந்து வீசினார்கள் என்று தெரிவித்துள்ளார்.