அண்டர்சனை எடுக்கப் போவது யார் : அணிகளுக்குள் போட்டா போட்டி!!

257

Anderson

புத்தாண்டு தினத்தன்று உலக சாதனை படைத்த ஆண்டர்சனை எடுக்க ஐபிஎல் அணிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

சூதாட்ட புகார்கள் உட்பட பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் விரைவில் தொடங்கவுள்ளது 7வது ஐபிஎல். இப்போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 12ம் திகதி நடக்கிறது.

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐந்து நபர்களை தக்கவைத்துக் கொண்டுள்ளன, இந்நிலையில் மற்ற வீரர்களுக்கான ஏலம் நடக்கிறது.

இதில் நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் கோரி அண்டர்சனை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. சென்னையும், மும்பையும் அதிக அளவில் பணம் செலவழித்து விட்டதால் அண்டர்சனை ஏலத்தில் எடுக்க போட்டி போடுமா என்பது சந்தேகமே.

அதே நேரத்தில் யாரையும் தக்க வைத்துக்கொள்ளாத டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் அண்டர்சனை எடுக்க ஆர்வம் காட்டும்.

புத்தாண்டு அன்று அவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 36 பந்தில் சதம் அடித்து அப்ரிடி சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.