சிலாபம் பொலிஸ் பிரிவில் 2013 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் 62 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்த பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் தெரிவித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு 72 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் இந்த பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தன. இந்த நிலைமையில் மாற்றங்களை ஏற்படுத்த பாடசாலை மற்றும் மூத்த சமூகத்தினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் கடந்த வருடம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகள் உள்ளிட்ட சிவில் அமைப்புகளில் ஒத்துழைப்புகளும் கிடைத்துள்ளன.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 18 வயதுக்கும் குறைவான யுவதிகள் என பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 35 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.