வவுனியாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வவுனியா நெற் இணையதளத்தால் உலர் உணவுப் பொதிகள்!!

536

வவுனியாவில் ஆறு நாட்களாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட 15 குடும்பத்தினருக்கு வவுனியா நெற் இணையத்தளம் (www.vavuniyanet.com) மற்றும் வவுனியா வர்த்தகர் சக்திநாத் ஆகியோரினால் இன்று (26.03.2020) காலை உலர் உணவு பொதிகளை வழங்கி வைக்கப்பட்டது.

ஓர் குடும்பத்தினருக்கு (அரிசி 5 கிலோ, கோதுமை மா 5 கிலோ, சீனி 1 கிலோ, பருப்பு 1 கிலோ, பூடு 250 கிராம், தேயிலை 200 கிராம், சோயா 500 கிராம், டின் மீன் 1பெரிது, சமபோசா பெரிது, உப்பு 1 கிலோ, கறிதூள் 250 கிராம்) போன்ற ரூபா 2000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வீதம் 15 குடும்பத்தினருக்கு 30,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் 10 குடும்பங்களுக்கு வவுனியா நெற் இணையத்தளத்தின் (www.vavuniyanet.com) நிதி உதவியிலும் மிகுதி 5 குடும்பங்களுக்கு வவுனியா வர்த்தகர் சக்திநாத் அவர்களின் நிதி உதவியிலும் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா மகாறம்பைக்குளம், தோணிக்கல், மணிபுரம், சிவபுரம், கற்குளம் படிவம் -3, செக்கட்டிப்புலவு ஆகிய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட (அன்றாடம் வாழ்வாதாரத்திற்கு கஸ்டப்படும்) 15 குடும்பத்திரை தெரிவு செய்து வவுனியா ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீஷன், வவுனியா சிங்கர் முகாமையாளர் உதயகுமார் கஜதீபன், சமூக ஆர்வலர் டென்சிகா, செக்கட்டிப்புலவு கிராம சேவையாளர் சுப்பிரமணியம் கிருஷ்சிகா ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

ஊரடங்குச் சட்டம் காரணமாக ஆறு தினங்களும் காலை உணவை மூன்று நேரமும் சாப்பிடும் ஐந்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் இவ் உதவித்திட்டத்தில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.