அரச ஊழியர்களுக்கு புத்தாண்டு முற்பணம் இல்லை : அரசாங்கம் அறிவிப்பு!!

736

சித்திரை புத்தாண்டுக்காக அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முற்பணம் இம்முறை வழங்கப்பட மாட்டாது என அரச நிர்வாக அமைச்சு சகல அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு நேற்று அறிவித்துள்ளது.

எனினும் அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் 8 ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.

தலைமை அதிகாரிகள் தவிர ஏனைய அதிகாரிகள் பெற்றுக்கொண்டுள்ள கடன்களுக்காக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அறவிட வேண்டிய தவணை மற்றும் வட்டி என்பன சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட மாட்டாது எனவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.