வவுனியா பம்பைமடு முகாமில் இருந்து 167 விமான பயணிகள் விடுவிப்பு!!

439

வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 167 விமான பயணிகள் இன்று காலை விடுவிக்கப்பட்டனர்.

வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி தலைமையில் பம்மைமடு இராணுவ முகாமில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிற்கு கடந்த 13 ஆம் திகதி 213 விமான பயணிகள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.

இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டிலிருந்து வந்தவர்கள் குறித்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டிருந்ததுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த பணிகளில் 167 விமான பயணிகளுக்கு கொரோனோ தொற்று இல்லாதநிலையில் அவர்களை யாழ்ப்பாணம், திருகோணமலை, புத்தளம், சிலாபம், மாத்தளை உள்ளிட்ட அவர்களது வதிவிடங்களுக்கு 11 பேரூந்துகளில் இராணுவத்தினரால் அழைத்து சென்று விடப்படவுள்ளனர்.