வவுனியாவில் மோட்டார் சைக்கில் இலக்கத்தகட்டினை மாற்றி கொள்ளையில் ஈடுபடும் இளைஞன் கைது!!

628

வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்படும் சமயங்களில் மோட்டார் சைக்கில் இலக்கத்தகட்டினை மாற்றி கொள்ளையில் ஈடுபடும் இளைஞன் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று (27.03.2020) மாலை கைது செய்துள்ளனர்.

ஊரடங்கு தளர்த்தப்படும் சமயங்களில் வீதிகளில் தனிமையில் நடமாடும் பெண்களின் தங்க நகைகள் அறுக்கப்பட்டதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு வழிகாட்டலில்,

வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரினித் திசானாயக்க தலைமையிலான பொலிஸ் சார்ஜன்டுகளான ரஞ்சித், விக்கரமசூரிய, காசிம், உபாலி மற்றும் பொலிஸ் கொஸ்தபர்கள்களான விஐயசிங்க, தயாளன், சதுரங்க, ஏக்கநாயக்க ஆகிய பொலிஸார் அடங்கிய குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த இளைஞனை நேற்று மாலை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதன் போது மோட்டார் சைக்கிலில் போலி இலக்கத்தட்டினை பொருத்தி இருந்ததுடன் குறித்த இளைஞனின் சட்டைக்குள் பல இலக்கத் தகடுகளை வைத்திருந்துள்ளார்.

பெண்கள் தனிமையில் நடமாடும் பகுதிகளில் மோட்டார் சைக்கிலில் இலக்கத்தகட்டினை மாற்றி கொள்ளையில் ஈடுபடுவதுடன் பின்னர் மோட்டார் சைக்கிலின் இலக்கத்தினை மாற்றி தப்பித்து செல்வதாக கைது செய்த இளைஞனின் மேற்கொண்ட விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

4 லட்சத்தி 40,000 ரூபா பெறுமதியான 5 1/2 பவுண் தங்க நகைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் கொள்ளையில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட பல்சர் ரக மோட்டார் சைக்கிலையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

வவுனியா கற்குளம் பகுதியினை சேர்ந்த 25வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதிவான் முன்னினையில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் சமயங்களில் வெளி இடங்களில் செல்லும் பொதுமக்கள் அநாவசியமாக தேவையின்றி ஆடம்பரமான தங்க ஆபரண்ங்களை அணிவதினை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.