இலங்கையில் கடுமையாகும் ஊரடங்கு சட்டம் : களமிறங்கும் இராணுவம்!!

668

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவாமல் இருப்பதற்காக ஊரடங்கு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக பொலிஸாருக்கு பக்கபலமாக இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாட்களில் சிலர் அந்த சட்டத்தை மதிக்காமல் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ஊரடங்கு சட்டத்தை கடுமையாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சில பொதுமக்களின் பொறுப்ப செயற்பாடுகள் காரணமாக கொரோனா நோயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வி கண்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இராணுவத்தினரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். தேவையற்ற வகையில் வெளியில் வரும் நபர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியுள்ளனர்.

கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பொலிஸார் பிரம்பு மற்றும் பொலிஸ் கட்டைகளுடன் வீதிகளில் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.