வவுனியாவில் 10 குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள்!!

491

வவுனியாவில் ஒரு வாரமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட 10 குடும்பத்தினருக்கு கனவுகள் அமைப்பினரினால் நேற்று முன்தினம் (27.03.2020) இரவு உலர் உணவு பொதிகளை வழங்கி வைக்கப்பட்டது.

ஒரு நேர உணவினை கூட சாப்பிட முடியாத நிலையில் தாம் மாத்திரமின்றி தமது பிள்ளைகளும் தவிப்பதாகவும் எமக்கு உதவி செய்யுமாறு வவுனியா ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீசனிடம் பாதிக்கப்பட்ட மக்கள் விடுத்த கோரிக்கைக்கமைவாக,

கனவுகள் அமைப்பினரினால் ஓர் குடும்பத்தினருக்கு (அரிசி 5 கிலோ, கோதுமை மா 5 கிலோ, சீனி 1 கிலோ, பருப்பு 1 கிலோ, பூடு 250 கிராம், தேயிலை 200 கிராம், சோயா 500 கிராம், டின் மீன் 1 பெரிது, சமபோசா பெரிது, உப்பு 1 கிலோ, கறிதூள் 250 கிராம்) போன்ற ரூபா 2000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வீதம் 10 குடும்பத்தினருக்கு 20,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா ஒமந்தை பனிக்கநீராவி மற்றும் பெரியமடு ஆகிய கிராமங்களில் வறுமையின் கொடூரத்தில் வாழும் 10 குடும்பத்தினருக்கு கனவுகள் அமைப்பு சார்பாக ரமேஸ் உதயகுமார் (லண்டன்) , பரிதிகள் அமைப்பு (2020 உயர்தரம்) ஆகியோரின் நிதியுதவியில் ஊடகவியலாளர்களான பாஸ்கரன் கதீஷன் , ராஜேந்திரன் சஜீவன் மற்றும் கனவுகள் அமைப்பின் சார்பாக தர்சிகன் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

குறித்த 10 குடும்பத்திலும் இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் தலைமைத்துவத்தினை கொண்ட குடும்பம், குடிசை வீட்டில் மின்சாரமின்றி மண்ணெண்ணை விளக்கில் வாழும் குடும்பம், வீடு இன்றி அனாதரவாக விடப்பட்ட வீடுகளில் வசிக்கும் குடும்பம், 5பிள்ளைகளுடன் சாப்பிட உணவின்றி தவிக்கும் குடும்பம் , தாய் மற்றும் தகப்பனை இழந்து பேத்தியாரின் துணையுடன் வாழும் குடும்பம் என மிகவும் கஸ்டப்படும் குடும்பத்தினருக்கே இவ் உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்குரிய பொருட்களை கொண்டு செல்வதற்கு வாகனத்தினை தந்து உதவிய திலிப் வாடகை கார் (Dilip Rent A Car) நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.