தயாரிப்பாளர் சங்க செயற்குழுவில் அடிதடி : பொலிசில் புகார்!!

263

Producersசென்னை பிலிம்சேம்பர் வளாகத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த மோதல் நடந்தது. நேற்று இரவு இக்கூட்டத்தை கூட்டினார்கள்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர்.தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் தயாரிப்பாளர் சங்க பொருளாளராக உள்ள கே.ராதாகிருஷ்ணன் எழுந்து சங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்து பேசினார். சிறு தயாரிப்பாளர்கள் பாதுகாப்புக்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்தினர். இதையடுத்து, கூட்டத்தில் மோதல் உருவானது. இரு தரப்பினர் கைகலப்பில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் அடிக்கவும் செய்தார்கள். சங்கத்தில் பொதுச் செயலாளர் கே.இ.ஞானவேல் ராஜாவின் சட்டையை பிடித்து சிலர் அடித்தனர்.

மோதல் குறித்து பொலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பொலிசார் வேன்களில் வந்து இறங்கினார்கள். மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

செயற்குழு கூட்டத்தில் தன்னை தயாரிப்பாளர்கள் மணிவேல், தாஸ் ஆகியோர் தாக்கியதாக ஆயிரம் விளக்கு பொலிசில் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.