இலங்கையின் மேலும் சில பகுதிகள் Lockdown செய்யப்படும் : இராணுவ தளபதி!!

594

இலங்கையின் மேலும் பல பகுதிகளை முழுமையாக முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான நபர்கள் பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் பழகியவர்களை கண்டுபிடிப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கையாக Lockdown செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அந்தந்த பகுதியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், முப்படையினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளனர்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.