வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நேற்று (29.01) பாடசாலை அதிபர் திரு.செ.தர்மரட்ணம் தலைமையில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இன் நிகழ்வில் 2014ம் ஆண்டுக்கான புதிய மாணவத் தலைவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் அவர்களுக்கு சின்னங்களும் சூட்டப்பட்டன. இன் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.