சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30க்கு முன்னர் வெளியிடப்படும்!!

417

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் 2020 ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படவுள்ளது. கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

எனவே பெறுபேறுகள் வெளியிடப்படுவதில் எவ்வித தாமதங்களும் இருக்காது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.