குடும்ப உறுப்பினர்கள் எவருமின்றி நள்ளிரவில் தகனம் செய்யப்பட்ட கொரோனா நோயாளியின் உடல்!!

590

கொரோனா தொற்றினால் உயிரிழந்த இரண்டாவது இலங்கையரின் உடலை தகனம் செய்யும் நடவடிக்கை இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பொது கல்லறையில் அவரது உடல் பாதுகாப்பாக எரியூட்டப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பிரதானிகள், நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய உறவினர்கள் இருவர் மாத்திரம் இறுதி நடவடிக்கையில் கலந்து கொள்ள முடியும். எனினும் அவரது தகன நடவடிக்கையின் போது எந்தவொரு உறவினரும் கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபர் இவராகும். நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.