சிறைச்சாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் அறுவர் படுகாயம்!!

464

சிறைச்சாலை பேருந்து

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் ஹக்கல பூங்கா பகுதியில் வைத்து, சிறைச்சாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் அறுவர் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி சென்ற சிறைச்சாலை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த பேருந்து தம்புரண்டு குடியிருப்யொன்றின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின்போது கைதிகள் எவரும் பேருந்தில் இருக்கவில்லை எனவும், சிறைச்சாலை பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே பயணித்துள்ளனர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பெண் பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.