திருகோணமலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!!

588

திருகோணமலையில்

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் உள்ள 5ஆம் கட்டைப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் தெரிவித்தார்.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞரொருவர் காய்ச்சல் இருமல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில நேற்று(31) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொவிட் 19 நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என்றும் இதனையடுத்து குறித்த இளைஞனின் குடும்பம் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.