கொரோனா நோயாளர்கள்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்று நோயாளர்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவானோர் உள்ளதாக சுகாதார துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொற்று நோய் பிரிவினால் இன்றைய தினம் வெளியிடப்பட்ட தினசரி அறிக்கைக்கமைய கொழும்பு மாவட்டத்திலேயே அதிக அளவிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.கொழும்பில் பதிவாகிய நோயாளர்களின் எண்ணிக்கை 32 ஆகும்.

புத்தளத்தில் 25 பேரும், களுத்துறையில் 24 பேரும் கம்பஹாவில் 11 பேரும் கண்டியில் 4 பேரும் இரத்தினபுரியில் 3 பேரும், குருநாகலில் ஒருவரும், காலியில் ஒருவரும், கேகாலையில் ஒருவரும், மட்டக்களப்பில் ஒருவரும், பதுளையில் ஒருவரும், யாழ்ப்பாணத்தில் இருவரும் மாத்தறையில் ஒருவரும் பதிவாகியுள்ளனர்.

நாடு முழுவதும் 146 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்கள் 34 பேரும் அதற்குள் உள்ளடங்குகின்றனர். 173 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை இரண்டு உயிரிழப்புக்கள் சம்பவித்துள்ளன.




