மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்து : சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி!!

417

விபத்து

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் சவுக்கடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.



ஏறாவூர் – சவுக்கடி கடற்கரை வீதியில் நேற்று மாலை உழவு இயந்திரமொன்றில் அதிவேகமாக பயணித்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம், பனை மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது மட்டக்களப்பு வாகரை பனிச்சங்கேணியை சேர்ந்த எஸ்.சுரேஸ்காந் (22வயது) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.