கொரோனா நோயாளி வந்த வாடகை வாகனத்திற்கு தீ வைத்த பிரதேசவாசிகள்!!

501

கண்டி அக்குரணை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியை விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு வந்த வானை கம்பளை பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பிரிவினர், கம்பளை சிங்கப்பிட்டி பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் பின்னர் இந்த வாகனத்தில் நுண்ணுயிர் தொற்றுக்கு நீக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் கடந்த 31 ஆம் திகதி இரவு வானுக்கு தீவைத்துள்ளனர்.

இந்த வானின் உரிமையாளர் கம்பளை புஸ்ஸல்லாவை பகுதியை சேர்ந்தவர். இவர் தனது வாகனத்தை விமான நிலையத்தில் வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நீர்கொழும்பை சேர்ந்த நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.

அக்குரணையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமானத்திற்கு வந்து அங்கிருந்து இந்த வாகனத்திலேயே தனது வீடடுக்கு சென்றுள்ளார்.

வாகனத்தில் வந்தவர் கொரோனா நோயாளி என தெரியவந்தை அடுத்து, வானின் உரிமை மற்றும் சாரதி ஆகியோர் இந்த தகவலை மறைத்துள்ளதுடன் வானையும் மறைத்து வைத்திருந்தாக பொலிஸார் கூறியுள்ளனர்.