ஊரடங்கு சட்டத்தை மீறிய 11,607 பேர் கைது : 2878 வாகனங்கள் பறிமுதல்!!

478

11,607 பேர் கைது..

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றத்துக்காக இதுவரை 11,607 பேர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு சட்டத்தை மீறியமைக்காக 2,878 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது வரையில்,

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இலங்கையிலும், 159 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஐவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.