இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு!!

613

கொரோனா நோயாளர்கள்..

இலங்கையில் மேலும் மூன்று கொரோனா நோயாளர்கள் இன்று இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 25 பேர் பூரண குணமடைந்து வீடு சென்றுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 132 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் நேற்று 3 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில், இன்று மேலும் 7 பேர் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.