இந்தியாவுக்காக விளையாடிய தந்தை- மகன்!!

409

Binny

இந்திய அணியில் தந்தையை தொடர்ந்து சகலதுறை வீரர் ஸ்டூவட் பின்னி அறிமுகமாகியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் அவர் ஆடியதன் மூலம் நாட்டுக்காக ஆடிய தந்தை- மகன் வரிசையில் பின்னியும் இணைந்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி ஆட்டக்காரராக திகழ்ந்தவரான ரோஜர் பின்னியின் மகன்தான் ஸ்டூவர்ட் பின்னி. ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவரான ஸ்டூவர்ட் அதன் மூலம் தற்போது இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவுக்காக ஆடிய மூன்றாவது தந்தை- மகன் ஜோடி என்ற பெயர் ரோஜர் பின்னிக்கும், ஸ்டூவர்ட் பின்னிக்கும் கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு யோகராஜ்- யுவராஜ் சிங், சுனில் கவாஸ்கர்- ரோஹன் கவாஸ்கரும் இந்திய அணியில் இடம் பெற்று ஆடியுள்ளனர்.

இந்தியாவின் முதல் உலக கிண்ணத்தை 1983ம் ஆண்டு கைப்பற்றிய போது, கபில்தேவ் தலைமையிலான அணியில் முக்கிய வீரராக இருந்தவர் ரோஜர். இந்தியாவுக்காக 72 ஒருநாள் போட்டிகளிலும், 27 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.