மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வீரர் திலகரத்ன டில்ஷான் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற போட்டியில் காயமடைந்ததன் காரணமாகவே அவர் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.
இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 28ம் திகதி, மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.