கொரோனா நோயாளியுடன்..

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டியில் கொரோனா நோயாளி ஒருவருடன் நெருக்கமான செயற்பட்ட 45 பேர் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 45 பேர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய குறித்த 45 பேரையும் புணானி தனிமைப்படுத்தல் முகாமிற்கு 14 நாட்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த மேலும் சிலர் இன்றைய தினம் தங்கள் வீடு நோக்கி செல்லவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.




